பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

ஏஐ மூலம் பிரபலங்களின் பலவிதமான போலியான புகைப்படங்கள், வீடியோக்களை சிலர் வெளியிட்டு வருகிறார்கள். அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 'பர்சனாலிட்டி ரைட்ஸ்', அதாவது தங்களது 'ஆளுமை உரிமை'யை பிரபலங்கள் பாதுகாத்துக் கொள்ள துவங்கியிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா, பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர்கள் அமிதாப்பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், அக்ஷய்குமார், சல்மான் கான், அபிஷேக் பச்சன், மாதவன், இயக்குனர் கரண் ஜோஹர், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ்பாபு, நாக சைதன்யா ஆகியோரும் இப்படி தங்களது ஆளுமை உரிமையைப் பெற்றுள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் இந்த வழக்கில் இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜுனியர் என்டிஆர் தற்போது இந்த உரிமையைப் பெற்றுள்ளார். “என்டிஆர், ஜுனியர் என்டிஆர், என்டிஆர் ஜுனியர், தாரக், நந்தமூரி தாரக ராமராவ் ஜுனியர், ஜுனியர் நந்தமூரி தாரக ராம ராவ், மேன் ஆப் மாஸஸ், யங் டைகர்' ஆகிய வார்த்தைகளை அவரது அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற உரிமையையும் வாங்கியுள்ளார்.
இந்த ஆளுமை உரிமை பாதுகாப்பு பெறும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் இன்னும் அதிகமாகலாம்.




