Advertisement

சிறப்புச்செய்திகள்

எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பகவந்த் கேசரி' மீது விஜய்க்கு ஒரு நம்பிக்கை: இயக்குனர் அனில் ரவிப்புடி

11 ஜன, 2026 - 06:06 IST
எழுத்தின் அளவு:
Vijay-has-faith-in-Bhagavanth-Kesari-Director-Anil-Ravipudi
Advertisement


விஜய்யின் கடைசி படமாக உருவாகி உள்ள 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால், தணிக்கை சான்றிதழ் வர தாமதம் காரணமாக படத்தைத் தள்ளி வைத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'ஜனநாயகன்' படம் 'பகவந்த் கேசரி' தெலுங்குப் படத்தின் ரீமேக் தான் என படக்குழு அறிவிக்கவில்லை. இருந்தாலும் டிரைலர் வெளியான பின்பு அது உறுதியாகிவிட்டது. இதனிடையே, 'பகவந்த் கேசரி' படத்தின் இயக்குனரான அனில் ரவிப்புடி இயக்கியுள்ள தெலுங்குப் படமான 'மன சங்கர வரபிரசாத் காரு' படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பேட்டி ஒன்றில் அனில் பேசுகையில்,

“விஜய் சாரோட கடைசி படம் எப்ப வந்தாலும் சாதனை படைக்கும். என்னை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், நான் ரீமேக் வேண்டாம், நேரடியாக தமிழில் படம் இயக்குகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவரோட கடைசி படம், ரீமேக் படம் பண்ணா அது எப்படி இருக்குமோ என ஒரு பயம் எனக்கு இருந்தது.

அவருக்கு 'பகவந்த் கேசரி' படம் ரொம்ப பிடிச்சிருந்தது. படத்துல சில விஷயங்கள் அவரை ரொம்பவே கவர்ந்திருந்தது. எதுக்கு ரீமேக்னு ஒரு கேள்வி வந்தாலும், அந்தப் படம் மேல அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது,” எனக் கூறியுள்ளார்.

விஜய்யின் நம்பிக்கை எந்த அளவுக்கு காப்பாற்றப்படும் என்பது படம் வரும் போதுதான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆளுமை உரிமை வழக்கு தொடர்ந்துள்ள கமல்ஹாசன்ஆளுமை உரிமை வழக்கு தொடர்ந்துள்ள ... பல இரவுகள் தூங்காமல் இருந்தேன்....'டிரோல்கள்' குறித்து விஜய் தேவரகொண்டா பல இரவுகள் தூங்காமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap