சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தேசிய விருது நடிகையான ப்ரியாமணிக்கு தமிழில் மருந்துக்குகூட படமில்லை. இதுதான் அவருக்கு பெரிய வருத்தமே. தெலுங்கு, கன்னடம், இந்தி என்று நடித்து வரும் தன்னை கோலிவுட் ஆசாமிகள் கண்டு கொள்ள மறுக்கிறார்களே என்று வேதனைப்பட்டு வரும் ப்ரியாமணி, தற்போது இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடுவது போன்று அடுத்து தமிழிலும் ரவுண்டு கட்டலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதனால், எதையாவது சொல்லி, பீல்டை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவர், தற்போது மீண்டும் பருத்தி வீரனில் நடித்த கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு விடவில்லை, பாரதிராஜா, மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து விட்டேன். ஆனால், ரஜினி, கமலுடன் ஒரு படத்தில்கூட நடிக்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
அதனால் அவர்களது படங்களில ஒரு பாட்டு அல்லது ஒரு கேரக்டரில் நடிக்கக்கூட ஆர்வமாக உள்ளேன் என்று மீடியாக்களில் செய்தி பரப்பி விட்டிருக்கிறார் ப்ரியாமணி. இதற்கிடையே, கோடம்பாக்கவாசிகள் தன்னை சுத்தமாக மறந்து விடக்கூடாது என்பதற்காக, சில சினிமா பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக ஆஜராகி விடுகிறாராம் நடிகை.