விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'சக்தித் திருமகன்' படத்தின் கதை குறித்து கடந்த சில நாட்களாக கதைத் திருட்டு சர்ச்சை எழுந்தது. அப்படத்தின் கதை தன்னுடையது என சுபாஷ் சுந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டு பெரும் சர்ச்சையானது. அதையடுத்து இயக்குனர் அருண் பிரபு, அது தன்னுடைய கதைதான் என்று மெயில் ஆதாரம் ஒன்றை வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக அவரைச் சார்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளைப் பதிவிட்டிருந்தார்கள்.
இதனிடையே, அருண் பிரபு இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான 'அருவி' படமே ஒரு எகிப்து படத்தின் காப்பி தான் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கூறியிருக்கிறார்கள். 2011ல் வெளிவந்த 'அஸ்மா' என்ற எகிப்து படத்தின் கதையும், 2016ல் வெளிவந்த 'அருவி' படத்தின் கதையும் ஒன்றுதான் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டு படங்களையும் பார்த்தால் அதை ரசிகர்களே எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.