பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
டைரக்டர் சசியின் ‘‘பூ‘‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி. முதல்படத்திலேயே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் தமிழ் சினிமாவில் அவர் அதற்கு அடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஏன் என்று கேட்டால் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன். சும்மா ஏனோ தானோ என்று கவர்ச்சி பதுமையாக வந்து போக விரும்பவில்லை. ஒரு படம் நடித்தாலும் அது ‘‘பூ‘‘ மாதிரி இருக்க வேண்டும் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது தனுஷின் "மரியான்" படத்தின் மூலம் ‘ரீ‘-என்ட்ரி கொடுத்துள்ள பார்வதி, தனுஷ் உடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளதாவது, தனுஷின் ‘‘ஆடுகளம்‘‘ பார்த்திருக்கேன். கதைக்கு ஏற்றார் போல் இயல்பாக நடிக்கும் திறமை உள்ளவர். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகழ்ச்சி. சினிமாவில் எவ்வளவு பெரிய ஷாட், ரிஸ்க் இருந்தாலும் அதற்கு ஏற்ற ரிஸ்க் எடுக்க கூடியவர். இயக்குனர் எதிர்பார்ப்பதை விட அதிகமாக நடித்து கொடுப்பவர். இன்றைய இளம் ஹீரோக்களில் சற்று வித்தியாசமானவர். இந்த இளம் வயதிலேயே கல்யாணம் முடித்து பிள்ளைகள் எல்லாம் பெற்று சினிமாவிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைக்காது. அவருடன் நடித்ததை மறக்க முடியாது. மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். மொத்தத்தில் தனுஷ் ஒரு ஸ்வீட் ஹீரோ என்று கூறியுள்ளார்.