ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி |

நடிகர் திலகத்தின் வாரிசுகள் பிரபும், ராம்குமாரும். பிரபு சினிமாவில் அறிமுகமாகி 250 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ஆனால் இன்னொரு வாரிசான ராம்குமார் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
ஆரம்பத்தில் நடிப்பு ஆர்வம் இல்லாத ராம்குமார் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். 1986ம் ஆண்டு 'அறுவடை நாள்' என்ற படத்தை தயாரித்தார், இதனை தற்போது நடிகராக இருக்கும் ஜி.எம்.குமார் இயக்கினார். இதில் பிரபுவும், பல்லவியும் காதலர்களாக நடித்தனர். அவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ பாதிரியாராக ராம்குமார் நடித்தார்.
படம் வெற்றி பெற்ற போதும் ராம்குமாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் 'மைடியர் மார்த்தாண்டன்' உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினியின் 'சந்திரமுகி' படத்தில் வரும் ஒரு பாடலில் சில வினாடிகள் வந்துபோவார். ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார். அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் இல்லை. சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தார்.