ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகளான மகேஸ்வரி, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கருத்தம்மா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அஜித், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். குறிப்பாக அஜித்துடன் இணைந்து நேசம், உல்லாசம் ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தான் மாறி மாறி நடைபெற்றன. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மகேஸ்வரி கூறும்போது அஜித் மீது தான் கொண்டிருந்த கிரஷ் குறித்தும் தன் இதயத்தை உடைக்கும் விதமாக அஜித் சொன்ன அந்த வார்த்தை குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நேசம் மற்றும் உல்லாசம் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடைபெற்றதால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அஜித்துடன் இணைந்து பயணித்தேன். அப்போதே அவர் மீது எனக்கு மிகப்பெரிய கிரஷ் இருந்தது. இந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து கிளம்பும் கடைசி நாளன்று என்னிடம் வந்த அஜித், மகி நீ என்னுடைய தங்கை போல உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேட்க தயங்காதே என்று கூறிவிட்டு சென்றார். அந்த வார்த்தையை அவரிடம் இருந்து கேட்டதும் என் இதயமே உடைந்து போனது” என்று கூறியுள்ளார்.




