சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான 'திரிஷ்யம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவின் முதல் 50 கோடி வசூல் படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியானாலும் கூட அந்த படமும் முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் தனது மனைவி கொலை செய்த போலீஸ் அதிகாரியின் மகன் உடலை, மோகன்லால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறு போலீஸ் ஸ்டேஷனுக்குள் அதுவும் இன்ஸ்பெக்டர் அறையில் புதைத்து வைப்பார். இந்த விஷயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியதுடன் இப்படி ஒரு கிளைமாக்ஸை வைத்ததற்காக ஜீத்து ஜோசப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்திற்காக முதலில் தான் யோசித்து வைத்திருந்த கிளைமாக்ஸ் வேறு என்று கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் இறுதி காட்சியில் இறந்த இளைஞனின் உடலை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு அந்த இடத்தின் மேலேயே நின்று மோகன்லாலும் அந்த இளைஞனின் பெற்றோரும் உருக்கமாக பேசுவது போல தான் கிளைமாக்ஸ் காட்சியை உருவாக்கி இருந்தேன். ஆனால் அது ஏதேச்சையாக அமைந்தது போல இல்லாமல் சுவாரசியத்திற்காக ஏதோ தற்செயலாக திணிக்கப்பட்டது போல எனக்கு தோன்றியது. அந்த சமயத்தில் நான் கேரள போலீஸுக்காக ஒரு டாக்குமென்டரி படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே அந்த உடலை புதைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் பிறகு தான் படத்தின் கிளைமாக்ஸை மாற்றினேன்” என்று கூறியுள்ளார்.