மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
இயக்குனர் வினோத் டைரக்ஷனில் நடிகர் விஜய் நடித்து வரும் ‛ஜனநாயகன்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. விஜய் அரசியலில் குதித்து விட்டதால் அவரது கடைசி படமாக இதை அறிவித்துள்ளார். அதனால் இந்த படம் அவரது அரசியல் நுழைவுக்கு அடித்தளம் போடும் விதமாகவும் அதேசமயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வரும் பிரதீப் இ ராகவ், இந்தப் படம் 100 சதவீதம் விஜய்யிசமாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இது குறித்து அவர் கூறும்போது, “ஜனநாயகன் படம் பற்றி இது தவிர வேறு எதையுமே நான் இப்போது சொல்ல முடியாது. அப்படி சொன்னால் ஒருவேளை என்னை படத்திலிருந்தே தூக்கி வீசி விடுவார்கள். ஆனால் படத்தில் என்ஜாய் பண்ணுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். படம் மிக நன்றாக வந்திருக்கிறது. 100 சதவீதம் விஜய்யிசமாக உருவாகி இருக்கிறது என்று மட்டும் சொல்வேன்” என்று கூறியுள்ளார்.