பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

தமிழில் ‛இமைக்கா நொடிகள்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷி கண்ணா. இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது ராஷி கண்ணா நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள ராஷி கண்ணா கூறும்போது, “பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் உஸ்தாத் பகத்சிங் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்ததுடன் வாழ்நாள் முழுமைக்கும் மனதில் தேக்கி வைத்து நினைத்துப் பார்க்கும் ஒரு ஞாபகார்த்தமாகவும் மிகப்பெரிய ஒரு கவுரவமாகவும் அமைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.