பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழில் ‛இமைக்கா நொடிகள்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷி கண்ணா. இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது ராஷி கண்ணா நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள ராஷி கண்ணா கூறும்போது, “பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் உஸ்தாத் பகத்சிங் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்ததுடன் வாழ்நாள் முழுமைக்கும் மனதில் தேக்கி வைத்து நினைத்துப் பார்க்கும் ஒரு ஞாபகார்த்தமாகவும் மிகப்பெரிய ஒரு கவுரவமாகவும் அமைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.