மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

மலையாளத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். தமிழில் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தையும், கார்த்தி நடித்த 'தம்பி' படத்தையும் இயக்கியவர். தற்போது 'மிராஜ்' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற 'லோகா' படம் குறித்த தனது கருத்துக்களைப் பேசியுள்ளார்.
“"ஒரு தொழில்துறையில் பல்வேறு வகையான திரைப்படங்கள் இருக்க வேண்டும். பொதுவாக நடப்பது என்னவென்றால், ஒரு வகையான திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகும்போது, எல்லோரும் அதே வகையை உருவாக்கத் தொடங்கிவிடுகிறார்கள். லோகாவின் வெற்றியால், இப்போது எல்லோரும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை உருவாக்கத் தொடங்குவார்கள் என்ற அபாயம் உள்ளது. அது சரியான விஷயம் இல்லை."
இப்போது லோகா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதால், மற்ற வகைகளில் பரிசோதனை செய்து அவற்றையும் வெற்றிகரமாக்குவது ஒரு சவாலாக இருக்கும். நான் எல்லா வகையான திரைப்படங்களையும் செய்ய விரும்புகிறேன்," என்றார்.
அவர் சொல்வதும் சரிதான். அது மலையாளத்தில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் அப்படித்தான் நடக்கும்.