சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழ்த் திரையுலகத்தில் அந்தக் காலத்தில் முதல் சூப்பர் ஸ்டார் எனப் பெயரெடுத்தவர் தியாகராஜ பாகவதர். அப்போது அவரைப் பற்றி தாறுமாறாக எழுதிய பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் என்பவரைக் கொன்ற குற்றத்திற்காக சிறை சென்று தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலையானார். அதன் பிறகு அவருடைய திரையுலக வாழ்க்கை அதல பாதாளத்திற்குச் சென்றது. அதன் பின் வறுமையில் சிக்கித் தவித்து இறந்து போனார்.
அந்த கொலை வழக்கை மையமாக வைத்து 'த மெட்ராஸ் மிஸ்டரி - பால் ஆப் எ சூப்பர் ஸ்டார்' என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இயக்குனர் ஏஎல் விஜய் தயாரிக்க, நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தொடரில் நடிகர் சாந்தனு தான், தியாகராஜ பாகவதர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கடந்த வாரம் அதன் சிறு முன்னோட்டம் வந்ததும் சமூக வலைதளத்தில் பரபரப்பானது. ஆனால், சாந்தனு அக்கதாபாத்திரத்தில் தான் நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
தியாகராஜ பாகவதர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மலையாள நடிகரான யோஹன் சாக்கோ. பல் மருத்துவம் படித்து டாக்டராகவும் இருப்பவர் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். பாலா இயக்கத்தில் இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த 'வணங்கான்' படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
சாந்தனுவும் அத்தொடரில் நடித்துள்ளார். ஆனால், அவரது கதாபாத்திரம் என்னவென்பது முழு டிரைலர் வெளியாகும் போது தெரிய வரும். நவம்பர் 6ம் தேதி இத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.