தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத், செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி, இயக்குநர் சங்க துணை தலைவர் பேரரசு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, எஸ்.வி.சேகர், சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் மங்கை அரிராஜன், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், எம்ஜிஆர் பல்கலைகழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.