இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது |
வட இந்திய சினிமாவில் எப்போதும் இஸ்லாமிய கலைஞர்களின் ஆதிக்கம் இருக்கும். தமிழ் சினிமாவில் அது குறைவு. தற்போதைய காலகட்டத்தில்கூட அமீர், மீரா கதிரவன், ராஜ்கிரண் மாதிரி ஒரு சிலரே உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக வந்த இஸ்லாமிய இயக்குனர், தயாரிப்பாளர் என்று எப்.நாகூரை குறிப்பிடலாம். இவரது பூர்வீகம் இலங்கை என்றும் இவரது குடும்பத்தினர் நாகூரில் குடியேறியவர்கள் என்றும் கூறுவார்கள். 1950 முதல் 1960 வரை தமிழ் சினிமாவில் பல வடிவங்களில் இருந்துள்ளார். தயாரிப்பாளராக, இயக்குனராக, பைனான்சியராக இருந்துள்ளார்.
எம்ஜிஆர் முதன் முறையாக மலையாளத்தில் நடித்த படம் 'ஜெனோவா'. அந்த படத்தை இயக்கியது எப்.நாகூர்தான். நேரடியாக மலையாளத்தில் தயாரித்து, தமிழில் டப் செய்யப்பட்ட படம். இதுதவிர 'நாம் இருவர், கீதா, ராஜாம்பாள், சந்ததி, அம்பிகாபதி, லைலா மஜ்னு' உள்ளிட்ட படங்களையும், சில தெலுங்கு படங்களையும் இயக்கி உள்ளார். இவரைப் பற்றிய அதிகப்படியான மேல் விபரங்களோ, புகைப்படமோ கிடைக்கவில்லை, என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள்.