மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
வட இந்திய சினிமாவில் எப்போதும் இஸ்லாமிய கலைஞர்களின் ஆதிக்கம் இருக்கும். தமிழ் சினிமாவில் அது குறைவு. தற்போதைய காலகட்டத்தில்கூட அமீர், மீரா கதிரவன், ராஜ்கிரண் மாதிரி ஒரு சிலரே உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக வந்த இஸ்லாமிய இயக்குனர், தயாரிப்பாளர் என்று எப்.நாகூரை குறிப்பிடலாம். இவரது பூர்வீகம் இலங்கை என்றும் இவரது குடும்பத்தினர் நாகூரில் குடியேறியவர்கள் என்றும் கூறுவார்கள். 1950 முதல் 1960 வரை தமிழ் சினிமாவில் பல வடிவங்களில் இருந்துள்ளார். தயாரிப்பாளராக, இயக்குனராக, பைனான்சியராக இருந்துள்ளார்.
எம்ஜிஆர் முதன் முறையாக மலையாளத்தில் நடித்த படம் 'ஜெனோவா'. அந்த படத்தை இயக்கியது எப்.நாகூர்தான். நேரடியாக மலையாளத்தில் தயாரித்து, தமிழில் டப் செய்யப்பட்ட படம். இதுதவிர 'நாம் இருவர், கீதா, ராஜாம்பாள், சந்ததி, அம்பிகாபதி, லைலா மஜ்னு' உள்ளிட்ட படங்களையும், சில தெலுங்கு படங்களையும் இயக்கி உள்ளார். இவரைப் பற்றிய அதிகப்படியான மேல் விபரங்களோ, புகைப்படமோ கிடைக்கவில்லை, என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள்.