'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

வட இந்திய சினிமாவில் எப்போதும் இஸ்லாமிய கலைஞர்களின் ஆதிக்கம் இருக்கும். தமிழ் சினிமாவில் அது குறைவு. தற்போதைய காலகட்டத்தில்கூட அமீர், மீரா கதிரவன், ராஜ்கிரண் மாதிரி ஒரு சிலரே உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக வந்த இஸ்லாமிய இயக்குனர், தயாரிப்பாளர் என்று எப்.நாகூரை குறிப்பிடலாம். இவரது பூர்வீகம் இலங்கை என்றும் இவரது குடும்பத்தினர் நாகூரில் குடியேறியவர்கள் என்றும் கூறுவார்கள். 1950 முதல் 1960 வரை தமிழ் சினிமாவில் பல வடிவங்களில் இருந்துள்ளார். தயாரிப்பாளராக, இயக்குனராக, பைனான்சியராக இருந்துள்ளார்.
எம்ஜிஆர் முதன் முறையாக மலையாளத்தில் நடித்த படம் 'ஜெனோவா'. அந்த படத்தை இயக்கியது எப்.நாகூர்தான். நேரடியாக மலையாளத்தில் தயாரித்து, தமிழில் டப் செய்யப்பட்ட படம். இதுதவிர 'நாம் இருவர், கீதா, ராஜாம்பாள், சந்ததி, அம்பிகாபதி, லைலா மஜ்னு' உள்ளிட்ட படங்களையும், சில தெலுங்கு படங்களையும் இயக்கி உள்ளார். இவரைப் பற்றிய அதிகப்படியான மேல் விபரங்களோ, புகைப்படமோ கிடைக்கவில்லை, என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள்.




