பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து, 77 காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை 19) காலை அவரது உயிர் பிரிந்தது.
கருணாநிதி - பத்மாவதி தம்பதியரின் மூத்த மகனான முத்து, 1948ம் ஆண்டு ஜனவரி 14ல் பிறந்தார். தந்தை கருணாநிதியின் கலையுலக வாரிசாக திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நடிப்பு திறமையையும் கடந்து சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். மறைந்த கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, அவரை விட்டு பிரிந்தார். பல காலமாக தனித்து வாழ்ந்து வந்தார்.
கடைசியாக 2012ம் ஆண்டு வெளியான ‛மாட்டுத்தாவணி' படத்தில் தேவா இசையில் ‛அன்னமாரே....' என்ற பாடலை பாடினார் முத்து. அதுவே அவரின் திரையுலக பயணத்தின் கடைசி பயணமாக அமைந்தது.
இந்நிலையில் இன்று காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தனது சகோதரர் முத்துவின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் முத்துவின் உடல் சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.