22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சென்னை : 80களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பாரதிராஜா இயக்கிய ‛கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து ‛சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, நாடோடி ராஜா, டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, கரிமேடு கருவாயன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவரது கணவர் மோகன் குப்தா பிரபல தொழிலதிபர். வீடு, நிறுவனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான அலங்காரப் பணிகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, நீலாங்கரையில் கணவர், பிள்ளைகளுடன் அருணா வசித்து வருகிறார்.
இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இவரது வீடு, அலுவலங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோகன், அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சோதனையின் நிறைவடைந்த பின்னர் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா உள்ளிட்ட விபரம் தெரியவரும்.