'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
சென்னை : 80களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பாரதிராஜா இயக்கிய ‛கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து ‛சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, நாடோடி ராஜா, டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, கரிமேடு கருவாயன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவரது கணவர் மோகன் குப்தா பிரபல தொழிலதிபர். வீடு, நிறுவனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான அலங்காரப் பணிகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, நீலாங்கரையில் கணவர், பிள்ளைகளுடன் அருணா வசித்து வருகிறார்.
இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இவரது வீடு, அலுவலங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோகன், அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சோதனையின் நிறைவடைந்த பின்னர் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா உள்ளிட்ட விபரம் தெரியவரும்.