முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் படமெடுத்தவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். அந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து காந்தி வரலாற்றை எடுத்தார். இப்போது திருவள்ளுவர் வரலாற்றை திருக்குறள் என்ற பெயரில் எடுத்துள்ளார். இந்த வாரம் படம் ரிலீஸ்.
இதில் கலைச்சோழன் திருவள்ளுவராகவும், தனலட்சுமி வாசுகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் ''இந்த படத்துக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் குமரி வள்ளுவர் சிலை இடம் பெறுகிறது. அதை உருவாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன்தான் இப்போது முதல்வர். அவர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இளையராஜா இசை படத்துக்கு பலம்.
திருக்குறள் படத்தில் காதல் காட்சிகள், வசனங்களும் அதிகம் இருக்கிறது. வள்ளுவர் காமத்து பாலையும் எழுதியிருக்கிறார். படத்தில் சில போர்க்கள காட்சியும் இருக்கிறது. இந்த படத்தில் வள்ளுவர் வெள்ளை உடையுடன் இளமையாக வருகிறார். அவர் அப்போது என்ன உடை அணிந்து இருந்தார் என யாருக்கும் தெரியாது. அவர் உடை விஷயத்தில் விவாதம் தேவையில்லை. அவர் சொன்ன நல்ல விஷயங்களை எடுப்போம். பிற்காலத்தில வள்ளுவர் போட்டோவை வரைந்த வேணுகோபால் சர்மாதான் அவருக்கு ஒரு உருவம், உடை கொடுத்தார்'' என்றார்.