பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் |
நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர்சி கூறியதே இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வார். அதனால் முன்னணி இயக்குனர்கள் கூட முழு கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் விஜய்யிடம் செல்வார்கள். விஜய்யை யோஹான் அத்தியாயம் 1 படத்திற்கு கௌதம் மேனன் புக் செய்தாலும் அவர் கதையை சொல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். படமும் கைவிடப்பட்டது. இந்நிலையில் சுந்தர் சி. தனக்கு கோர்வையாக கதை சொல்ல வராது என்றும், அதனால் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியிருப்பதாவது, எங்கேயோ, ஏதோ குழப்பம். விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர் கூறியதே இல்லை. இருவருமே கடின உழைப்பாளிகள் என்று தெரிவித்துள்ளார்.