லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நடிகர் பார்த்திபன், நடிகை சீதா இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமான 11 வருடங்களில் பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு கீர்த்தனா, அபினயா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ராதாகிருஷ்ணன் என்ற மகனை தத்தெடுத்து வளர்த்தார்கள். கீர்த்தனா, ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடனும், அபினயா சீதாவுடனும் இருந்து வந்தார்கள். மகள்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது.
ராதாகிருஷ்ணன் விரைவில் படம் இயக்க உள்ளதாக தற்போது பார்த்திபன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
“ராக்கி பார்த்திபன் ! என் மகன், என் உயிருக்கு நிகர்.
கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார். விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன்.
என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!”. இவ்வாறு பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
பலரும் பார்த்திபனுக்கும், ராக்கிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.