இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

கமல்ஹாசனும், மணிரத்னமும் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த படம் 'தக்லைப்'. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தை மெகா ஹிட் படம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுடன், சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்களை நடிக்க வைத்தார் மணிரத்னம். என்றாலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தக்லைப் படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக முதல் நாளில் இருந்தே அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாக தொடங்கின.
அதனால் இந்திய அளவில் முதல் நாளில் 17 கோடி வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 7.15 கோடியும், மூன்றாவது நாளில் 7.75 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடியும் வசூலித்த நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் 3.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்த படம் 40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இது இந்தியன்- 2 படத்தை விட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்தமான வசூல் காரணமாகவே இதுவரை தக்லைப் படக்குழு அப்படத்தின் வசூல் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்கள்.