தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் பூர்ணிமா பாக்யராஜ், அவர் மகன் சாந்தனு ஆகியோர் சந்தித்து பேசியிருக்கின்றனர். அடுத்தடுத்து இரண்டு பெரிய நடிகர்களை அம்மாவும், மகனும் சந்திக்க என்ன காரணம் என்று விசாரித்தால் இயக்குனர் கே. பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதை முன்னிட்டு அவருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி, கமல் இல்லாமல் தமிழ் சினிமாவில் பாராட்டு விழாவா? தவிர, பாக்யராஜ், பூர்ணிமாவுடன் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த நட்பின் அடிப்பையில் நேரில் போய் அழைப்பு விடுத்ததாக தகவல்.
அந்த விழாவில் பாக்யராஜ் டீமில் பணியாற்றவர்கள், அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், அவரின் நண்பர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தவுடன் இன்னும் சில மாதங்களில் அந்த பாராட்டு விழா நடக்க உள்ளது. பாக்யராஜ் நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' 1979ல் வெளியானது. ஆனால், '16 வயதினிலே' காலத்திலேயே இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அவர் வேலை செய்து இருக்கிறார் பாக்யராஜ். அதற்கு முன்பும் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து இருக்கிறார். அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டை தொட்டுவிட்டார்.