காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. பெப்சியின் தலைவராக இயக்குனர் ஆர் கே செல்வமணி தொடர்ந்து படங்களின் தோல்விக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், இப்போதைய தமிழ் சினிமாவின் போக்கு எப்படி வீழ்ச்சிக்கு வித்திடுகிறது என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜின் என்கிற படத்தின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார் ஆர்கே செல்வமணி. அப்போது அவர் பேசும்போது, “இப்போதெல்லாம் பெரும்பாலான வளர்ந்து வரும் கதாநாயகர்கள் யாருமே ஒரு இயக்குனரிடம் நேரடியாக கதை கேட்பது என்பது குறைந்து விட்டது. அவரிடம் மேனேஜர்களாக இருப்பவர்களும் உதவியாளர்களும் தான் கதையை கேட்கிறார்கள். இதனால் இயக்குனருக்கும் ஹீரோவுக்குமான ஒரு நட்பு, உறவு துண்டிக்கப்படுகிறது.
தவறான புரிதல் உருவாகிறது. இதை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும். தங்களது உதவியாளர்கள், மேனேஜர்கள் மூலமாக கதை கேட்பதை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் கதாசிரியர்களிடம் நேரடியாக அமர்ந்து முழு கதையை கேட்டால் படத்தின் தோல்வியையும் தவிர்க்கலாம். தங்களது திரையுலக பயணத்திலும் தொடர்ந்து வெற்றியை சந்திக்கலாம்” என்று கூறியுள்ளார்.