‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. பெப்சியின் தலைவராக இயக்குனர் ஆர் கே செல்வமணி தொடர்ந்து படங்களின் தோல்விக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், இப்போதைய தமிழ் சினிமாவின் போக்கு எப்படி வீழ்ச்சிக்கு வித்திடுகிறது என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜின் என்கிற படத்தின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார் ஆர்கே செல்வமணி. அப்போது அவர் பேசும்போது, “இப்போதெல்லாம் பெரும்பாலான வளர்ந்து வரும் கதாநாயகர்கள் யாருமே ஒரு இயக்குனரிடம் நேரடியாக கதை கேட்பது என்பது குறைந்து விட்டது. அவரிடம் மேனேஜர்களாக இருப்பவர்களும் உதவியாளர்களும் தான் கதையை கேட்கிறார்கள். இதனால் இயக்குனருக்கும் ஹீரோவுக்குமான ஒரு நட்பு, உறவு துண்டிக்கப்படுகிறது.
தவறான புரிதல் உருவாகிறது. இதை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும். தங்களது உதவியாளர்கள், மேனேஜர்கள் மூலமாக கதை கேட்பதை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் கதாசிரியர்களிடம் நேரடியாக அமர்ந்து முழு கதையை கேட்டால் படத்தின் தோல்வியையும் தவிர்க்கலாம். தங்களது திரையுலக பயணத்திலும் தொடர்ந்து வெற்றியை சந்திக்கலாம்” என்று கூறியுள்ளார்.