நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
விஜய், அஜித் இருவருமே பெரிய நடிகர்களாக வளராத காலத்தில் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. 1995ம் ஆண்டு இந்த படம் வெளியானது. அடுத்து இணைந்து நடித்திருக்க வேண்டிய படம் 'நேருக்கு நேர்'. இந்த படம் 1997ம் ஆண்டு வெளியானது. வசந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிம்ரன், கவுசல்யா, சாந்தி கிருஷ்ணா, கரன், விவேக், தாமு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார், மணிரத்னம் தயாரித்திருந்தார்.
எலியும், பூனையுமாக மோதிக் கொள்ளும் இரண்டு இளைஞர்களின் கதை. இந்த படத்தில் முதலில் விஜய்யும், அஜித்தும் இணைந்து நடித்தார்கள். சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்ட நிலையில் அஜித் படத்திலிருந்து விலகினார். விஜய் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்து தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைந்ததாக அஜித் உணர்ந்ததால் விலகியதாக கூறப்பட்டது.
அதன் பிறகு அஜித்திற்கு பதிலாக சூர்யா நடித்தார். இது சூர்யாவிற்கு முதல் படம். மகனை ஹீரோவாக்க சிவகுமார் முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில் சிவகுமாரின் குடும்ப நண்பரான வசந்த் கேரக்டர் பற்றி எடுத்துச் சொல்லி நடிக்க வைத்தார். இந்த படத்திற்கு பிறகும் விஜய், சூர்யா இணைந்து சில படங்களில் நடித்தனர். ஆனால் இந்த படத்திற்கு பிறகு விஜய், அஜித் இணைந்து நடிக்கவில்லை.