இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
மறைந்த நடிகர் விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படை தலைவன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‛ரமணா' பட அனுபவங்களை, அதில் நீண்ட புள்ளி விவர டயலாக்கை விஜயகாந்த் எப்படி 2 டேக்கில் ஓகே செய்தார் என்றும், அவர் பெருமைகளையும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
அப்போது சண்முக பாண்டியனை வைத்து ரமணா பார்ட்2வை எடுக்க தயார் என்றார். அது நடக்குமா என்று விசாரித்தால் ரமணா படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அவர் தலைப்பு கொடுத்து, படத்துக்கு ஓகே சொன்னால் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு முருகதாசும் கதையை தயார் செய்ய வேண்டும். தகுந்த தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும்.
சண்முகபாண்டியன் மாமாவான எல்.கே.சுதீஷ் விஜயகாந்த்தை வைத்து பல படங்களை தயாரித்தார். அவர் ரமணா 2வை தயாரிக்கலாம் என்கிறார்கள். இப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி படத்திலும் நடித்து வருகிறார் சண்முக பாண்டியன்.