மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
நடிகர் சந்தானத்தின் நண்பர் நடிகர் கூல் சுரேஷ். பல படங்களில் காமெடி கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். பல சினிமா மேடைகளில் படத்தை பிரபலப்படுத்த ஏதாவது காமெடியாக பேசுவார். சென்னையில் நடந்த அனல் மழை என்ற பட விழாவில், வழக்கத்துக்கு மாறாக அவர் கண்ணீர் விட்டார். அந்த படத்துக்காக அல்ல. சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம், கோவிந்தா பாடல் சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. அந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு.
அதுகுறித்து பேசிய கூல் சுரேஷ், ‛‛என் நண்பன் சந்தானம் கடவுள் பக்தி உடையவர். அவர் காரில் அவ்வளவு சாமி படங்கள், வேப்பிலை இருக்கும். அவர் கோவிந்தா பாடலை அவமதிக்கமாட்டார். ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் அந்த பாடலை எதிர்க்கிறார்கள். திருப்பதிக்குள் தமிழர்களை விடமாட்டோம் என்கிறார்கள். அது தவறு. திருப்பதி பெருமாள் படத்தை வீட்டில் வைத்து கூட கும்பிடுவோம். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் ஒரு நடிகர்தான். அவருக்கு சினிமா கஷ்டம் தெரியும்.
இந்த படத்தை அவர், அவர் தரப்பு பார்த்துவிட்டு பேச வேண்டும். ஏதாவது குறைகள் இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். என் நண்பன் சந்தானம் படத்துக்கு பிரச்னைகள் வர வேண்டாம். அது நல்ல படியாக ரிலீஸ் ஆக வேண்டும். பவன் கல்யாண் அவர்களே உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என மேடையில் விழுந்து வணங்கினார் கூல் சுரேஷ். பேசும்போது பல இடங்களில் கண் கலங்கினார்.