பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

ராஜ்குமார் ராவ், வாமிகா கபி மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாக வேண்டிய ஹிந்தித் திரைப்படம் 'பூல் சக் மாப்'. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் இருந்ததால் படம் பார்க்க வரும் ரசிகர்களின் நலன் கருதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான மேட்டாக் பிலிம்ஸ். அதற்குப் பதிலாக அடுத்த வாரம் மே 16ம் தேதி இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள்.
இப்படத்திற்கான முன்பதிவுகள் ஆன்லைன் தளங்களில் நடைபெற்று வந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இப்படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்காக சுமார் 60 கோடி வரை புரமோஷன் செலவு செய்துள்ளோம்.
டிரைலர்களை இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிட்டது, சமூக வலைதள புரமோஷன், போஸ்டர், பேனர்கள், ஸ்டான்டிஸ் உள்ளிட்டவற்றிற்காக செலவு செய்யப்பட்ட தொகைதான் அந்த 60 கோடி என்றும் அந்த நஷ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றும் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அவ்வளவு தொகை என்பது அதிகபட்ச தொகை, படத்தின் தயாரிப்பாளரே இப்படத்தின் புரமோஷனுக்காக 25 கோடிதான் ஒதுக்கியிருந்தார் என்றும் படக்குழு சார்பாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்கு வாரம் வெளியிட தடை விதித்து வழக்கை ஜுன் 16ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.