நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜ்குமார் ராவ், வாமிகா கபி மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாக வேண்டிய ஹிந்தித் திரைப்படம் 'பூல் சக் மாப்'. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் இருந்ததால் படம் பார்க்க வரும் ரசிகர்களின் நலன் கருதி படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான மேட்டாக் பிலிம்ஸ். அதற்குப் பதிலாக அடுத்த வாரம் மே 16ம் தேதி இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள்.
இப்படத்திற்கான முன்பதிவுகள் ஆன்லைன் தளங்களில் நடைபெற்று வந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இப்படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்காக சுமார் 60 கோடி வரை புரமோஷன் செலவு செய்துள்ளோம்.
டிரைலர்களை இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிட்டது, சமூக வலைதள புரமோஷன், போஸ்டர், பேனர்கள், ஸ்டான்டிஸ் உள்ளிட்டவற்றிற்காக செலவு செய்யப்பட்ட தொகைதான் அந்த 60 கோடி என்றும் அந்த நஷ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றும் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அவ்வளவு தொகை என்பது அதிகபட்ச தொகை, படத்தின் தயாரிப்பாளரே இப்படத்தின் புரமோஷனுக்காக 25 கோடிதான் ஒதுக்கியிருந்தார் என்றும் படக்குழு சார்பாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்கு வாரம் வெளியிட தடை விதித்து வழக்கை ஜுன் 16ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.