தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' |
பஹல்காம் நகரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
பஹல்காமில் பயங்காரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கணவனை இழந்த பெண்கள் என்ற செய்தி இந்திய மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கணவனை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பறி கொடுத்த அந்தப் பெண்களுக்கும் நியாயம் ஏற்படுத்திரும் விதமாகத்தான் 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது என்கிறார்கள். ஹிந்தியில் 'சிந்தூர்' என்றால் தமிழில் 'குங்குமம்' என்று அர்த்தம். இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் குங்குமம் என்பது சென்டிமென்ட் சார்ந்த ஒன்று.
அதனால், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரை தங்களது படத்திற்காகக் பதிவு செய்ய ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பலர் பதிவு செய்ய விண்ணப்பம் தந்துள்ளார்களாம். கடந்த இரண்டு நாட்களாக இந்தப் பெயர் இந்திய அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், இந்தியர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராக உள்ளது. இது எதிர்கால ராணுவ வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் நிலைத்து நிற்கும் அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் முதலில் விண்ணப்பித்திருந்தார்களோ அவர்களுக்குத்தான் இந்தப் பெயர் முறைப்படி தரப்படும். அப்படி பெறப் போகிறவர் யார் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.