பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பஹல்காம் நகரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
பஹல்காமில் பயங்காரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கணவனை இழந்த பெண்கள் என்ற செய்தி இந்திய மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கணவனை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பறி கொடுத்த அந்தப் பெண்களுக்கும் நியாயம் ஏற்படுத்திரும் விதமாகத்தான் 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது என்கிறார்கள். ஹிந்தியில் 'சிந்தூர்' என்றால் தமிழில் 'குங்குமம்' என்று அர்த்தம். இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் குங்குமம் என்பது சென்டிமென்ட் சார்ந்த ஒன்று.
அதனால், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரை தங்களது படத்திற்காகக் பதிவு செய்ய ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பலர் பதிவு செய்ய விண்ணப்பம் தந்துள்ளார்களாம். கடந்த இரண்டு நாட்களாக இந்தப் பெயர் இந்திய அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், இந்தியர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராக உள்ளது. இது எதிர்கால ராணுவ வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் நிலைத்து நிற்கும் அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் முதலில் விண்ணப்பித்திருந்தார்களோ அவர்களுக்குத்தான் இந்தப் பெயர் முறைப்படி தரப்படும். அப்படி பெறப் போகிறவர் யார் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.