முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

ஒரே கதை மூன்று மொழிகளில் வெவ்வேறு இயக்குனர்கள், ஹீரோக்கள் இருந்தும் மூன்று மொழிகளிலும் நடித்த நாயகி பானுமதி. படம் அபூர்வ சகோதரர்கள். பிரமாண்ட படங்களை தயாரித்து வந்த ஜெமினி ஸ்டூடியோ மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தை தயாரிக்க முடிவு செய்து தேர்வு செய்த கதை அலெக்ஸாண்ட்ரே டுமாஸ் எழுதிய நாவலான "தி கோர்சிகன் பிரதர்ஸ்"
வில்லன் ஒரு குடும்பத்தை அழிப்பான். அந்த குடும்பத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் திசைக்கு ஒருவராக தூக்கி வீசப்படுவர்கள். அவர்கள் வளர்ந்து வாலிபனான பிறகு இருவரும் இணைந்து வில்லனை பழிவாங்கும் கதை. இதே கதை பின்னாளில் ஏகப்பட்ட படங்களாக வந்தது.
இந்த படத்தில் எம்.கே.ராதாவும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். ஆர்.நாகேந்திர ராவ் வில்லனாக நடித்தார். இவர்கள் தவிர எல்.நாராயண ராவ், ஜி.பட்டு ஐயர், லட்சுமிபிரபா, சூர்யபிரபா மற்றும் 'ஸ்டண்ட்' சோமு ஆகியோர் நடித்தனர். வழக்கறிஞராக இருந்த டி.ஜி.ராகவாச்சாரி (ஆச்சார்யா) இயக்கினார்.
படம் பெரிய வெற்றி பெற்றது. அதனால் தெலுங்கில் 'அபூர்வா சகோதரலு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதிலும் எம்.கே.ராதா, பானுமதி நடித்தனர். இதே படம் ஹிந்தியில் 'நிஷான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ரஞ்சன் ஹீரோவாக நடித்தார். பானுமதி ஹீரோயினாக நடித்தார். மூன்று மொழிகளிலுமே படம் சூப்பர் ஹிட்டானது.