சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
கடந்த வருடம் மலையாளத்தில் பணி என்ற படம் வெளியானது. மலையாள திரையுலகில் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் ஜோஜூ ஜார்ஜ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்ததுடன் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். நாடோடிகள் அபிநயா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பழிவாங்கும் கதையம்சத்துடன் வெளியான இந்த படத்தின் கதை விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. தமிழிலும் கூட இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ, அடுத்தபடியாக வெளியாக இருக்கும் கமலின் தக் லைப் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய அடுத்த படம், புதிய கதை... புதிய இடங்கள்.. புதிய கதாபாத்திரங்கள்.. பணி-2 விரைவில்” என்று கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.