சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கடந்த வருடம் மலையாளத்தில் பணி என்ற படம் வெளியானது. மலையாள திரையுலகில் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் ஜோஜூ ஜார்ஜ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்ததுடன் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். நாடோடிகள் அபிநயா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பழிவாங்கும் கதையம்சத்துடன் வெளியான இந்த படத்தின் கதை விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. தமிழிலும் கூட இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ, அடுத்தபடியாக வெளியாக இருக்கும் கமலின் தக் லைப் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய அடுத்த படம், புதிய கதை... புதிய இடங்கள்.. புதிய கதாபாத்திரங்கள்.. பணி-2 விரைவில்” என்று கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.