50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
நடிகை சமந்தா தயாரித்துள்ள முதல் படமான 'சுபம்' படத்தின் நிகழ்ச்சி விசாகப்பட்டிணத்தில் நடந்தது. அப்போது தனது கண்களை அவர் அடிக்கடி துடைத்துக் கொண்டிருந்தது, ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மகிழ்ச்சியில் கண் கலங்கினாரா அல்லது வேறு ஏதாவது சோகமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் அது குறித்து விளக்க வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் சமந்தா. அதில், “அதிக வெளிச்சமுள்ள லைட்டிங்கில் எனது சென்சிட்டிவ்வான கண்கள் பாதிக்கப்படுகிறது. அதனால், கண்களில் இருந்து கண்ணீர் கசிகிறது. அதனால்தான் நான் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வேறு எந்த எமோஷனல் காரணமும் அல்ல, நான் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு சமந்தாவிற்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வந்தது. அதனால், சினிமாவில் நடிப்பதை சிறிது காலம் தவிர்த்திருந்தார். பின்னர் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சைகளை மேற்கொண்டார். தற்போது அதிக வெளிச்சத்தால் அவரது கண்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.