நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாளத்தில் 'குஞ்சிராமாயணம், கோதா மற்றும் மின்னல் முரளி' என மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் இயக்குனர் பசில் ஜோசப். இதில் மின்னல் முரளி திரைப்படம் இவரை பாலிவுட் வரை பேச வைத்தது. அதே சமயம் நட்புக்காக சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் காமெடியாக நடிக்க துவங்கிய இவர், தற்போது முழு நேர நடிகராக மாறி டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இவர் படங்களை தேர்வு செய்தாலும் பல படங்களில் வில்லத்தனம் கலந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அது மட்டுமல்ல,
கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் அதிக அளவு படங்களில் நடித்த ஹீரோ என்றால் இவராகத்தான் இருக்கும்.. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இவருக்கு 'மேன் ஆப் தி இயர்' என்கிற விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருது கிடைத்தது குறித்து அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “பசில் ஜோசப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. எங்களைப் போன்ற நடிகர்கள் ஒவ்வொரு படம் வெளியாகும்போது எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கிறோம். ஆனால் வீக்லி ஸ்டார் (வெள்ளிக்கிழமை நாயகன்) என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் அவரது படம் வெளியாகிறது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.