'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
மலையாளத்தில் 'குஞ்சிராமாயணம், கோதா மற்றும் மின்னல் முரளி' என மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் இயக்குனர் பசில் ஜோசப். இதில் மின்னல் முரளி திரைப்படம் இவரை பாலிவுட் வரை பேச வைத்தது. அதே சமயம் நட்புக்காக சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் காமெடியாக நடிக்க துவங்கிய இவர், தற்போது முழு நேர நடிகராக மாறி டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இவர் படங்களை தேர்வு செய்தாலும் பல படங்களில் வில்லத்தனம் கலந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அது மட்டுமல்ல,
கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் அதிக அளவு படங்களில் நடித்த ஹீரோ என்றால் இவராகத்தான் இருக்கும்.. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இவருக்கு 'மேன் ஆப் தி இயர்' என்கிற விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருது கிடைத்தது குறித்து அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “பசில் ஜோசப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. எங்களைப் போன்ற நடிகர்கள் ஒவ்வொரு படம் வெளியாகும்போது எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கிறோம். ஆனால் வீக்லி ஸ்டார் (வெள்ளிக்கிழமை நாயகன்) என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் அவரது படம் வெளியாகிறது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.