ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
அமரன் படத்திற்கு பின் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா இயக்கும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதன்பிறகு குட் நைட் என்ற படத்தை இயக்கிய விநாயக் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடிகர் அஜித் குமார், ஷாலினி உடன் இணைந்து சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை பார்த்தார்கள். அதுகுறித்த புகைப்படங்கள் அப்போது வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா ஆகியோருடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.