நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கடந்த 2023ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான், டங்கி என மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக கிங் என்ற படத்தில் மே 18ம் தேதியிலிருந்து நடிக்கப் போகிறார் ஷாருக்கான். ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார். 2023ம் ஆண்டில் இந்த படத்தில் நடிக்க ஷாருக்கானை ஒப்பந்தம் செய்தபோது தீபிகா படுகோனேவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்தார்களாம். அதன்பிறகு அவர் கர்ப்பமாக இருந்ததால் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் கிங் படம் 2024ல் திட்டமிட்டபடி தொடங்காமல் இப்போது 2025, மே மாதம் தொடங்குவதால் தீபிகா படுகோனேவும் குழந்தை பிறந்து மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அதனால் முதலில் திட்டமிட்டபடி தீபிகா படுகோனேவையே கிங் படத்தின் கதாநாயகி ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதனால் நயன்தாராவுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு நழுவி சென்றுள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.