ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‛ரெட்ரோ' படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வருகிறார் சூர்யா. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட சூர்யா, ரெட்ரோ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய கதையில் உருவாகி இருக்கிறது என்று பேசியவர், தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் தனது 45வது படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
வருகிற மே மாதம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ள சூர்யா, ரெட்ரோ படம் வெளியாகும் அதே மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நானியின் ‛ஹிட் -3' படமும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த அறிவிப்பு மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் ‛வாடிவாசல்' மீண்டும் தள்ளிப் போவது தெரிய வந்துள்ளது.