ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‛ரெட்ரோ' படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வருகிறார் சூர்யா. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட சூர்யா, ரெட்ரோ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய கதையில் உருவாகி இருக்கிறது என்று பேசியவர், தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் தனது 45வது படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
வருகிற மே மாதம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ள சூர்யா, ரெட்ரோ படம் வெளியாகும் அதே மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நானியின் ‛ஹிட் -3' படமும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த அறிவிப்பு மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் ‛வாடிவாசல்' மீண்டும் தள்ளிப் போவது தெரிய வந்துள்ளது.