நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‛டிடி நெக்ஸ்ட் லெவல்'. இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி, லொள்ளு சபா ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற மே மாதம் 16ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டு வருகிறார் சந்தானம்.
இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக கஸ்தூரி நடித்திருக்கிறார். இதுகுறித்து சந்தானம் கூறுகையில், ‛‛கஸ்தூரி இடத்தில் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்றதும், சந்தானத்திற்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வதா? எனக்கென்ன அவ்ளோ வயதா ஆகிவிட்டது என்று அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதையடுத்து கதையைக் கேட்டுவிட்டு முடிவை சொல்லுங்கள் என்று இயக்குனர் அவரிடத்தில் மொத்த கதையும் சொன்னதும் உடனே சம்மதம் தெரிவித்தார். காரணம் இந்த படத்தில் அவர் நடிக்கும் அம்மா கேரக்டர்தான் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது'' என்கிறார் சந்தானம். மேலும், தற்போது சந்தானத்திற்கு 45 வயதும், கஸ்தூரிக்கு 50 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




