மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் |
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‛டிடி நெக்ஸ்ட் லெவல்'. இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி, லொள்ளு சபா ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற மே மாதம் 16ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டு வருகிறார் சந்தானம்.
இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக கஸ்தூரி நடித்திருக்கிறார். இதுகுறித்து சந்தானம் கூறுகையில், ‛‛கஸ்தூரி இடத்தில் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்றதும், சந்தானத்திற்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வதா? எனக்கென்ன அவ்ளோ வயதா ஆகிவிட்டது என்று அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதையடுத்து கதையைக் கேட்டுவிட்டு முடிவை சொல்லுங்கள் என்று இயக்குனர் அவரிடத்தில் மொத்த கதையும் சொன்னதும் உடனே சம்மதம் தெரிவித்தார். காரணம் இந்த படத்தில் அவர் நடிக்கும் அம்மா கேரக்டர்தான் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது'' என்கிறார் சந்தானம். மேலும், தற்போது சந்தானத்திற்கு 45 வயதும், கஸ்தூரிக்கு 50 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.