வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழில் ‛தொட்டான் சிணுங்கி, தூண்டில்' ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ். அதியமான். அதன் பின்னர் ஹிந்தி படங்களை இயக்கி வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் இயக்குனராக எந்தவொரு படங்களையும் இயக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தமிழில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் ரேவதி, விதார்த் மற்றும் லிஜோ மொல் ஜோஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.




