தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
டிரெயின், ஏஸ் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தை பூரி ஜெகநாத்துடன் இணைந்து நடிகை சார்மியும் தயாரிக்கிறார். பாலிவுட் நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பஹத் பாசிலை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாவதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு வில்லன் நடிகர் நடித்தால் படத்துக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என்பதால் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.