பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

டிரெயின், ஏஸ் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தை பூரி ஜெகநாத்துடன் இணைந்து நடிகை சார்மியும் தயாரிக்கிறார். பாலிவுட் நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பஹத் பாசிலை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாவதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு வில்லன் நடிகர் நடித்தால் படத்துக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என்பதால் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.