நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தொடரும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் உடன் இணைந்து ஷோபனா நடித்துள்ளார். ஆபரேஷன் ஜாவா புகழ் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். கடந்த மாதம் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் தொடரும் திரைப்படம் முதல் காட்சியிலிருந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று கொச்சியில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இந்த படத்தை பார்க்க இயக்குனர் தருண் மூர்த்தி வந்திருந்தார். படம் பார்த்து முடித்துவிட்டு அவர் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோகன்லால் அவருக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்தார்.
அவரிடம் படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை கேள்விப்பட்டதாக கூறி தருண் மூர்த்தியை பாராட்டினார் மோகன்லால். அப்போது தருண் மூர்த்தி, தான் திரையரங்கில் இப்போதுதான் படம் பார்த்துவிட்டு வருவதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள் என்றும் கூறியபடி மோகன்லாலுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை ரசிகர்களிடம் காட்டினார். ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்த மோகன்லாலும் அவர்களிடம் சில வார்த்தைகள் உரையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.