‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
தில்லுக்கு துட்டு (டிடி) பட வரிசையில் தற்போது சந்தானம் நடித்து வரும் படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. தி ஷோ பீப்பிள் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் போயனப்பள்ளி தயாரிக்கிறார். வருகிற மே 16ம் தேதி படம் வெளியாகிறது.
படம் பற்றி சந்தானம் கூறியிருப்பதாவது: 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றிக்கு பிறகு அதே மாதிரியான படங்களை ரசிகர்கள் விரும்பினார்கள். அதனால் 'டிடி ரிட்டர்ன்ஸ்' வரை நடித்தேன். இதன் அடுத்த கட்டம்தான் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் வழக்கத்தை விட பல கூடுதல் சிறப்புகள் இருக்கு. நான் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம். கூடவே இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகன் இணைந்திருக்கிறார்கள். அதோடு இந்த படத்தில் ஹாரர், காமெடி தாண்டி நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது.
நான் சினிமா விமர்சனம் செய்யும் யூடியூப்பராக நடிக்கிறேன். இந்த விமர்சனத்தால் எனக்கு ஒரு எதிர்பாராதவிதமான சம்பவம் நடக்கிறது. அதற்கு பிறகு என்னென்ன சிக்கல்கள் வருகிறது. அதை சமாளித்து எப்படி மீள்கிறேன் என்பதுதான் கதை.
படத்தின் நாயகி கீத்திகா திவாரி, தெலுங்கில் இருந்து தமிழுக்கு வருகிறார்; அவருக்கு படத்தில் இரண்டு கெட்அப் இருக்கிறது. தவிர நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, 'லொள்ளு சபா' மாறன், மொட்டை ராஜேந்திரன்னு எனது டீம் அப்படியே படத்தில் இருக்கிறது. என் அம்மா அப்பாவா கஸ்தூரியும் நிழல்கள் ரவியும் படம் முழுவதும் வர்றாங்க. தங்கையாக யாஷிகா ஆனந்த். அண்ணன் - தங்கை கலாய்க்கற சீன்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அது இந்த படத்தில் நிறையவே இருக்கும்.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி, 'தில்லுக்கு துட்டு'ல இருந்து பல படங்கள் என்னோட பயணிக்கிறார். லைட்டிங், மேக்கிங் இரண்டிலும் ரொம்ப வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கார். இசையமைப்பாளர் அப்ரோவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். என்றார்.