கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். தற்போது முதன்முறையாக சொந்தமாக ஒரு படத்தை தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ‛சுபம்' என பெயரிட்டுள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வரும் மே 9ல் படம் ரிலீஸாகிறது. இதையொட்டி படத்தினை புரொமோஷன் செய்து வருகிறார்.
சமந்தா கூறுகையில், ‛‛எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் எனக்கு வெட்கமாக உள்ளது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என யோசிக்கிறேன். ஆனால் சுபம் படத்தில் நடித்துள்ளவர்களின் நடிப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்'' என்றார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த ‛விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா. அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‛யே மாய சேசாவே' படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தபோது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை சென்று பின்னர் பிரிந்தனர். தனது முதல் படத்தை பற்றி சமந்தா இப்படி பேசியிருப்பது நாகசைதன்யா மீதான வெறுப்பால் என்பது தெளிவாக தெரிகிறது.