சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். தற்போது முதன்முறையாக சொந்தமாக ஒரு படத்தை தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ‛சுபம்' என பெயரிட்டுள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வரும் மே 9ல் படம் ரிலீஸாகிறது. இதையொட்டி படத்தினை புரொமோஷன் செய்து வருகிறார்.
சமந்தா கூறுகையில், ‛‛எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் எனக்கு வெட்கமாக உள்ளது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என யோசிக்கிறேன். ஆனால் சுபம் படத்தில் நடித்துள்ளவர்களின் நடிப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்'' என்றார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த ‛விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா. அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‛யே மாய சேசாவே' படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தபோது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை சென்று பின்னர் பிரிந்தனர். தனது முதல் படத்தை பற்றி சமந்தா இப்படி பேசியிருப்பது நாகசைதன்யா மீதான வெறுப்பால் என்பது தெளிவாக தெரிகிறது.




