பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏராளமான மொழிகளில் பின்னணி பாடி வருபவர் கே.எஸ். சித்ரா. இவர், 1987ம் ஆண்டு விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து 2002ம் ஆண்டில் அவர்களுக்கு நந்தனா என்ற மகள் பிறந்தார். ஆனால் 2011ம் ஆண்டு தனது ஒன்பதாவது வயதிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்நிலையில் தனது மகளின் நினைவு நாளான நேற்று பாடகி சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'என்னால் உன்னை தொட முடியாது. உன் பேச்சைக் கேட்க முடியாது, பார்க்க முடியாது. ஆனால் நீ எப்போதுமே என் இதயத்தில் இருப்பதால் உன்னை என்னால் உணர முடிகிறது என் அன்பே. மீண்டும் நாம் ஒரு நாள் சந்திப்போம். உன்னை இழந்த வலியை அளவிட முடியாது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ. படைப்பாளர்களின் உலகில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என நம்புகிறேன்,' என்று உருக்கமாக பதிவிட்டுருக்கிறார் பாடகி கே.எஸ்.சித்ரா.