தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏராளமான மொழிகளில் பின்னணி பாடி வருபவர் கே.எஸ். சித்ரா. இவர், 1987ம் ஆண்டு விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து 2002ம் ஆண்டில் அவர்களுக்கு நந்தனா என்ற மகள் பிறந்தார். ஆனால் 2011ம் ஆண்டு தனது ஒன்பதாவது வயதிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்நிலையில் தனது மகளின் நினைவு நாளான நேற்று பாடகி சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'என்னால் உன்னை தொட முடியாது. உன் பேச்சைக் கேட்க முடியாது, பார்க்க முடியாது. ஆனால் நீ எப்போதுமே என் இதயத்தில் இருப்பதால் உன்னை என்னால் உணர முடிகிறது என் அன்பே. மீண்டும் நாம் ஒரு நாள் சந்திப்போம். உன்னை இழந்த வலியை அளவிட முடியாது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ. படைப்பாளர்களின் உலகில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என நம்புகிறேன்,' என்று உருக்கமாக பதிவிட்டுருக்கிறார் பாடகி கே.எஸ்.சித்ரா.