ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
‛குட் பேட் அக்லி' படத்தில் ‛ஒத்த ரூவாய் பாடல்' உள்ளிட்ட தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் ஏப்., 10ல் வெளியான படம் ‛குட் பேட் அக்லி'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தபடம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 5 நாட்களில் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது.
சமீபகாலமாக பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்தி டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்த படத்தில் ‛‛தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..., ஒத்த ரூவாய் தாரேன்...'' போன்ற சில பாடல்களை பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக இளையராஜா இசையில் வெளிவந்த ‛‛ஒத்த ரூவாய் தாரேன்..., இளமை இதோ இதோ..., என் ஜோடி மஞ்சக்குருவி...'' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் அவரது வக்கீல், ‛குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்த பாடல்கள் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.