‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
‛குட் பேட் அக்லி' படத்தில் ‛ஒத்த ரூவாய் பாடல்' உள்ளிட்ட தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் ஏப்., 10ல் வெளியான படம் ‛குட் பேட் அக்லி'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தபடம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 5 நாட்களில் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது.
சமீபகாலமாக பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்தி டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்த படத்தில் ‛‛தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..., ஒத்த ரூவாய் தாரேன்...'' போன்ற சில பாடல்களை பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக இளையராஜா இசையில் வெளிவந்த ‛‛ஒத்த ரூவாய் தாரேன்..., இளமை இதோ இதோ..., என் ஜோடி மஞ்சக்குருவி...'' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் அவரது வக்கீல், ‛குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்த பாடல்கள் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.