அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா அதிரடியான படங்களை எடுத்து பெயர் வாங்கியதை விட, சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததன் மூலமே சமீபகால ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார், அரசியல் குறித்தும் சினிமா துறையில் உள்ளவர்கள் குறித்தும் மனதில் பட்டதை கூறுகிறேன் என இவர் வெளியிடும் சோசியல் மீடியா பதிவுகள் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதன் மூலம் இவர் கைது செய்யப்படும் அளவிற்கு எல்லாம் நிலைமை சீரியசாக சென்றது. அப்படி ஒரு முறை நடந்த நிகழ்வு ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய டுவிட்டர் பதிவுகள் காரணமாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு என்னை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. ஆனால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்னை போனில் அழைத்து, உன்னை கைது செய்வதற்காக வருகிறார்கள். சட்டப்படி என்பதால் எதுவும் மோசமாக நடந்து கொள்ளாதே என்று கூறினார்,
அதே சமயம் என்னுடைய வழக்கறிஞர்கள் குழுவுடன் இதுபற்றி விவாதித்தபோது என் மீது பதியப்பட்ட வழக்கில் புதிய சட்ட விதிகளின்படி வழக்கு பதிய முடியாது, கைது செய்ய முடியாது என நீதித்துறை கூறியிருந்தது. ஆனால் இது எதையும் அறியாமல் என்னை கைது செய்ய வந்த போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்த போது என்ன செய்வது என்றால் தெரியாமல் குழம்பி நின்றனர். பிறகு என் வீட்டிற்குள் வந்து என்னுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உற்சாகமாக பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றார்கள்” என்று கூறியுள்ளார்.