நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பொதுவாக மலையாள படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதில்லை. காரணம் தமிழ் மக்களுக்கு மலையாளம் எளிதில் புரியும் என்பதால். பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். மற்ற படங்கள் ஓடிடியில் வெளியாகும்போது தமிழிலும் வெளியாகும். தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆபீசர் ஆன் டூட்டி' என்ற படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (மார்ச் 14) வெளியாகிறது. இந்த படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
போலீஸ் கிரைம் திரில்லர் படமான இதில் குஞ்சாகோ போபன் போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். அவரது மனைவியாக பிரியாமணி நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜெகதீஷ், விஷாக் நாயர், மீனாட்சி அனூப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜித்து அஷ்ரப் இயக்கி உள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார், ரூபி வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.