ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேகா ஷெட்டி, மாளவிகா என இரு நாயகிகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், சரவணன், 'கஞ்சா' கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லூரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இரா. சரவணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எம்.குரு கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை ஸம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது, எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.