என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்புவும், அதே காலகட்டத்தில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது வரை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுந்தர் சியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்குத் திருமணமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று இருவரும் வழிபட்டுள்ளனர். சுந்தர் சி முடி காணிக்கையும் செலுத்தியுள்ளார்.
“இன்று எனது 25வது திருமண நாளில் எனது திருமணப் புடவையை அணிவதில் மிகவும் பெருமை அடைகிறேன். பழனி முருகப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதை விட எங்கள் நாளைத் தொடங்குவதற்கு இதைவிட சிறந்த வழியை நாங்கள் கேட்டிருக்க முடியாது. இன்று நாங்கள் இப்படி இருப்பதற்கு முருகனின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவும் நடக்காது,” என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.