போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமிதாப் பச்சன், கடந்த 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 82 வயதாகிறது. ரஜினி நடித்து கடைசியாக திரைக்கு வந்த வேட்டையன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த நேரத்தில் தனது இணையதள பக்கத்தில், நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் அமிதாப்பச்சன்.
இந்த பதிவை பாலிவுட் ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் பல கோணங்களில் வெளியிட்டு வந்தன. குறிப்பாக வயதாகி விட்டதால் அவர் சினிமாவை விட்டு வெளியேறப்போகிறார். அதைத்தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்றும் செய்தி வெளியிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதைதான் அப்படி பதிவிட்டிருந்தேன். வேறு எதுவும் இல்லை'' என்று ஒரு விளக்கம் கொடுத்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .