பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

உறியடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகரும், இயக்குனருமான விஜய் குமார். தற்போது இவர் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி உடன் இருக்கும் போட்டோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‛‛எப்படியோ ரஜினி சாரை சந்தித்துவிட்டேன். கூலி படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து ஆசி பெற்றது வாழ்நாளுக்குமான சிறந்த தருணம். லவ் யூ தலைவா. இந்த சந்திப்பிற்கு காரணமான நண்பர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.