'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் | 'கர' படத்தில் ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு |

உறியடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகரும், இயக்குனருமான விஜய் குமார். தற்போது இவர் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி உடன் இருக்கும் போட்டோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‛‛எப்படியோ ரஜினி சாரை சந்தித்துவிட்டேன். கூலி படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து ஆசி பெற்றது வாழ்நாளுக்குமான சிறந்த தருணம். லவ் யூ தலைவா. இந்த சந்திப்பிற்கு காரணமான நண்பர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.




