தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை |
சந்தானம் நடித்து 2017ல் வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அதன்பின் தமிழில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி' ஆகிய படங்களில் நடித்தார். மராத்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த பான் இந்தியா கன்னடப் படமான 'மார்ட்டின்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஹர்ஷவர்தன் என்பவரைத் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார் வைபவி சாண்டில்யா. திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசீர்வாதங்களுடன், ஹர்ஷவர்தனும் நானும் அன்பு மற்றும் ஒற்றுமையின் இந்த அழகான பயணத்தைத் தொடங்கி உள்ளோம். அனைவரின் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுமணத் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.