கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் | மீண்டும் தலைவராக விரும்பும் மோகன்லால்... : ஆனால் ஒரு நிபந்தனையுடன்? | ஐந்து வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் : விஜய் பட நாயகி ஓபன் டாக் |
இசையமைப்பாளர்கள் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சி நடத்தி வருவது போல, நடிகர் பிரபுதேவா முதன் முறையாக லைவ் கான்செப்ட் நிகழ்ச்சியை இன்று(பிப்., 22) சென்னையில் நடத்த இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அது மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கிய பாகமாக நடிகை சிருஷ்டி டாங்கேவும் இணைந்து இருந்தார். இந்த நிலையில் இந்த லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்று கூறி ஒரு அதிரடி அறிவிப்பை தனது சோசியல் மீடியா பக்கமாக வெளியேற்றுள்ளார் சிருஷ்டி டாங்கே.
இந்த பதிவில் அவர் கூறும்போது, “இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகிக் கொள்ளும் தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கே எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதற்கும் பிரபுதேவாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. ஆனால் பாகுபாடுகளை பார்த்துக் கொண்டு என்னால் அந்த இடத்தில் இருக்க முடியாது. இத்தனை வருடங்களாக நான் இந்த திரையுலகில் இருந்தும் எனக்கு தகுதியுடைய சில விஷயங்களுக்காக கூட நான் போராட வேண்டி இருப்பது உண்மையிலேயே என்னை மனம் நோக செய்கிறது.
அது மட்டுமல்ல தவறாக கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும் சரிவர நிறைவேற்றப்படாத உத்தரவாதங்களும் என்னை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கின. இவைதான் நான் இந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் இருக்கும் முக்கிய காரணங்கள். பிரபுதேவாவை இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. அவரை நாம் எப்போதும் கொண்டாடி வருகிறோம்.
ஆனால் மனதில் வைத்து போற்றி காலத்திற்கும் அசைபோடும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கப் போகும் இந்த நிகழ்வு எனக்கு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இதை நான் உங்களிடம் வருத்தம் தெரிவிப்பதற்கான விஷயமாக கூறவில்லை. நீங்கள் அனைவரும் நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் இதை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் சிருஷ்டி டாங்கே.